ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
088 திருவீழிமிழலை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 8 பண் : சீகாமரம்

பரந்த பாரிடம் ஊரி டைப்பலி
பற்றிப் பாத்துணுஞ் சுற்ற மாயினீர்
தெரிந்த நான்மறையோர்க் கிட மாய திருமிழலை
இருந்து நீர்தமி ழோடி சைகேட்கும்
இச்சை யாற்காசு நித்தல் நல்கினீர்
அருந்தண் வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

மிக்க பூத கணங்களை, ஊர்களில் பிச்சையேற்று அதனைப் பகுத்து உண்ணும் சுற்றமாக உடையவரே, ஆராய்ந்த நான்கு வேதங்களை உணர்ந்தோராகிய அந்தணர்க்கு இடமான திருமிழலை யுள், அரிய, குளிர்ந்த வீழி மரத்தின் நிழலை இடமாகக்கொண்டவரே, நீர், இனிதிருந்து இசையைத் தமிழோடு கேட்கும் விருப்பத்தால், அத்தகைய தமிழைப் பாடியோர்க்குப் பொற்காசினை நாள்தோறும் வழங்கினீர் ; அதுபோல, அடியேனுக்கும் அருள் செய்யீர்.

குறிப்புரை :

` உண்ணும் ` என்ற பெயரெச்சம், ` சுற்றம் ` என்னும் ஏதுப்பெயர் கொண்டது. இத்தலத்தில் இறைவர் ; இசைத் தமிழைப் பாடியோர்க்கு நித்தல் காசு நல்கியது, திருஞானசம்பந்தர்க்கும், திருநாவுக்கரசர்க்கும் என்பது நன்கறியப்பட்டது.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
receiving alms in the villages you have the relation of pūtam with which you share it.
residing in tirumiḻai, which is the place for brahmins who have made researches into the four vētam-s.
you daily gave money in the form of coins wishing to hear tamiḻ verses and music.
This refers to the story of Civaṉ giving money to campantar and nāvukkaracar during a famine in this shrine.
you occupied the shade of cool and rare vīḻi.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
para:ntha paaridam oori daippali
pa'r'rip paaththu'nunj su'r'ra maayineer
theri:ntha :naanma'raiyoark kida maaya thirumizhalai
iru:nthu :neerthami zhoadi saikaedkum
ichchai yaa'rkaasu :niththal :nalkineer
aru:ntha'n veezhiko'ndeer adi yae'rkum aru'luthirae.
சிற்பி