உலகீர், சிறிய கையை உடைய பெண்யானைகள், துளையையுடைய கையையுடைய ஆண் யானைகட்கு உறவாய் நின்று, முகமன்கூறி, பெரிய மூங்கில்களை ஒடித்துக் கொடுத்து, சுனைகளின் நீரைத் தெளித்தலால், அவற்றின் வளைவையுடைய கையினின்றும் பொழிகின்ற மழை மிகுதியாக, மயிலும், பெண்மானும் நிலத்தைக் கிண்டுதலால் மாணிக்கங்கள் தெறிக்கின்ற, ` திருக்கேதாரம் ` என்று சொல்லுமின்கள்.
` சொல்லி ` என்றது, பான்மை வழக்கு. மூங்கில் இலை கள் யானைக்கு உணவாதல் அறிக. ` தூவி ` என்றது, ` தூவ ` என்பதன் திரிபு. ` மயிலும் மான்பிணையும் நிலத்தைக் கிளைக்கும் ` என்றது, கோழியும், எருதும் ஆண்டு இல்லை என்பதை விளக்கி நின்றது.