தமிழ்ப்பாடலைப் பாடிய திருநாவுக்கரசரும், திரு ஞானசம்பந்தரும், மற்றும் எவராயினும், சிவனடியார்களுக்கு அடிய னாகி, அவர்கட்கு அடித்தொண்டு செய்பவனாகிய நம்பியாரூரன், இறைவனது திருக்கேதாரத்தைப் பாடிய, இனிய தமிழ்ப் பாடலைப் பாட வல்லவர்கள், எல்லாவற்றிற்கும் மேலுள்ள உலகமாகிய சிவ லோகத்தில் இருப்பவராவர்.
` மி? u2970?` ஏழனுருபு ; அஃது உருபு மயக்கமாய், நான்காவதன் பொருளைத் தந்தது. ` தமிழ் ` என்றது தாப்பிசையாய், முன்னுஞ் சென்றியையும். ` யாவர் ` என்றதன்பின், ` ஆயினும் ` என்பது வருவிக்க. ` அடியான் ` என்றது முற்றெச்சமாய், ` அடித் தொண்டன் ` என்னும் வினைக் குறிப்புப் பெயரைக் கொண்டது. ` பாவாகிய இனிய தமிழ் ` என்க. அன்றி, ` இன், சாரியை ` எனினுமாம்.