நள்ளாறு, பழையாறு, கோட்டாறு, நன்மை நிலவும், நாலாறு, திருஐயாறு, தெள்ளாறு, வளைகுளம், தளிக்குளம், நல்ல இடைக்குளம், திருக்குளம், அஞ்சைக்களம், குறையாத சிறப்புடைய நெடுங்களம், வேட்களம், நெல்லிக்கா, கோலக்கா, ஆனைக்கா, பரந்து திகழும் கோடிகா என்றெல்லாம் தேன் நிறைந்த கொன்றைப் பூ மாலை அணிந்த சிவபெருமான் விளங்கும் ஆறு, குளம், களம், கா ஆகிய எல்லாவற்றையும் கூறுவோம்.
குறிப்புரை :
இத்திருத்தாண்டகம், ` ஆறு, குளம், களம், கா ` என வருவனவற்றை வகுத்து அருளிச் செய்தது.
நள்ளாறு, கோட்டாறு, ஐயாறு இவை மேலைத் திருப் பதிகத்திற் சொல்லப்பட்டன.
பழையாறு, நாலாறு, தெள்ளாறு இவை வைப்புத் தலங்கள்.
வளைகுளம், தளிக்குளம், இடைக்குளம், திருக்குளம் ஆகிய அனைத்தும் வைப்புத் தலங்கள். தளிக்குளம் - தஞ்சைத் தளிக்குளம்.
அஞ்சைக்களம், நெடுங்களம், வேட்களம் மூன்றும் மேலைத் திருப்பதிகத்திற் சொல்லப்பட்டன. நெல்லிக்கா, ஆனைக்கா, கோடிகா இவையும் மேலைத் திருப்பதிகத்திற் சொல்லப்பட்டன.
கோலக்கா, சோழநாட்டுத் தலம்.
ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
English / ஆங்கிலம்
We will hail every aaru, kulam, kalam and kaa where
The Lord adorned with melliferous konrai, abides;
Such as Nallaaru, Pazhaiyaaru, Kottaaru, Naalaaru
Of goodly weal, Tiruvaiyaru, Tellaaru, Valaikulam,
Talikkulam, goodly Idaikkulam, Tirukkulam, Anjaikkalam,
Nedungkalam, Vetkalam, Nellikkaa, Kolakkaa,
Aanaikka and extensive Kodikaa.