ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
068 திருமுதுகுன்றம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 2

காரொளிய கண்டத்தெங் கடவுள் தன்னைக்
    காபாலி கட்டங்க மேந்தி னானைப்
பாரொளியை விண்ணொளியைப் பாதாளனைப்
    பால்மதியஞ் சூடியோர் பண்பன் தன்னைப்
பேரொளியைப் பெண்பாகம் வைத்தான் தன்னைப்
    பேணுவார் தம்வினையைப் பேணி வாங்குஞ்
சீரொளியைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
    தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

நீலகண்டனாய்க் காபாலக்கூத்து ஆடுபவனாய், கட்டங்கப்படையை ஏந்தியவனாய், நில உலகு விண் உலகு பாதாள உலகு இவற்றிற்கு ஒளி வழங்குபவனாய், வெள்ளிய பிறையைச் சூடியவனாய், நற்பண்புக்கு நிலைக்களனாய், தனக்கு நிகரில்லாத ஞான ஒளியை உடையவனாய், பார்வதி பாகனாய், தன்னை விரும்பும் அடியவர்களைத் தானும் விரும்பி, அவர்கள் வினைகளைப் போக்கும் சிறப்பான புகழ் ஒளியை உடையவனாய்த் திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.

குறிப்புரை :

கார்ஒளிய - கரிதாகிய ஒளியினை உடைய. ``கபாலி`` என்புழியும் இரண்டனுருபு விரிக்க. பாரின்கண் உள்ள ஒளி, ஞாயிறு திங்கள் விண்மீன்கள். பாதலத்தில் உள்ளது இருளாகலின், ``பாதாளனை`` என்பதற்கு, `அதன்கண் உள்ள இருளானவனை` என உரைக்க; `ஒளியும் இருளும் அவனே` என்றதற்கு இவ்வாறு ஓதியருளினார். ``பாதாளத் தானை`` என்பது பாடம் அன்று. `சூடிய` என்பதன் இறுதிநிலை தொகுத்தலாயிற்று. ``ஓர் பண்பு`` என்றது, சார்ந்தாரைக் காத்தலை. பேரொளி - எல்லா ஒளிகட்கும் முதலாய் உள்ள ஒளி. பேணுவார்- விரும்பிப் போற்றுவார். பேணி - குறிக் கொண்டு. சீர்ஒளி - (வினை தீர்க்கப்பெற்றார் புகழும்) புகழ்களை உடைய ஒளி; வினை, இருளோடொப்பது ஆகலின், அதனை நீக்குபவனை, ``ஒளி`` என்று அருளினார்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
He is the Lord with a shining black throat;
He is Kaapaali That wields a kattangkam;
He is the light of earth And sky;
He is of the nether world;
in grace He wore The milk-white moon;
He is light immense;
He shares A Woman in His person;
He is the glorious light that willingly Does away with the karma of those that hail Him;
His is Tirumuthukunram;
alas,
I,
the one of evil karma,
Stood perplexed unaware of Him!
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
kaaro'liya ka'ndaththeng kadavu'l thannaik
kaapaali kaddangka mae:nthi naanaip
paaro'liyai vi'n'no'liyaip paathaa'lanaip
paalmathiyanj soodiyoar pa'npan thannaip
paero'liyaip pe'npaakam vaiththaan thannaip
pae'nuvaar thamvinaiyaip pae'ni vaangkunj
seero'liyaith thirumuthukun 'rudaiyaan thannaith
theevinaiyaen a'riyaathae thikaiththa vaa'rae.
சிற்பி