அம்பு போன்ற கூரிய கண்களையுடைய உமாதேவி அஞ்ச, கோபமுடைய, தூணிலே கட்டக்கூடிய மதயானையின் தோலை உரித்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், நறுமணமிக்க சோலை களையுடையதும், இரத்தினங்கள் பதிக்கப் பெற்ற மாடமாளிகைகள் நிறைந்த அழகிய தேவலோகத்து நகரமாகிய அமராவதியைப் போன்று நிலைபெற்று விளங்குவதும் ஆகிய திருமாணிகுழியாகும்.
அம்பு அனைய - அம்புபோன்ற. கண் உமை மடந்தை அவள், கண்களையுடைய உமாதேவியார். அஞ்சி வெருவ - மிகவும் அஞ்ச. சினம் உடை - கோபத்தையுடைய. கம்பம் - தூணிலே கட்டக் கூடிய. யானை உரி செய்த - யானையை உரித்தருளிய. அரனார் - சிவபெருமான். கருதி - எண்ணி. மேய - மேவிய ; இடமாம். வம்புமலி - வாசனைமிக்க. ( சோலை ) புடைசூழ - சுற்ற. மணி - இரத்தினங்கள பதித்த. மாடம் - வீடுகளின் வரிசை. நீடி - உயர்ந்து. அழகு ஆர் - அழகு பொருந்திய. உம்பரவர் கோன் - தேவர்க்கு அரசனாகிய இந்திரனது. நகரம் என்ன - நகரமாகிய அமராவதி என்னும்படி. மிக மன்னு - நன்கு நிலைபெற்ற. ( உதவிமாணி குழியே ).