திருமாலும், மணம் பொருந்திய சிறந்த தாமரை மலரில் உறையும் நான்முகனும் ஆகிய இருவரும் அறியாதவாறு உயர்ந்து நின்ற இறைவனது இடம், அழகிய சுதை தீட்டப்பட்ட மாளிகைகளின்மேல் கட்டப்பட்ட கொடிகள் வானத்தில் திகழும் வேணுபுரம் ஆகும்.
கண்ணன் - (திருமால்) கரியவன். கடி - மணம். மலர் - தாமரை. அண்ணல் - பிரமன். இறை - இறைவன். (சிவன்) வண்ணம்- அழகு. சுதை - சுண்ணம்.