ஒளிதரும் பிறையையும், வில்வத்தளிர்களையும் சடைமிசை உடையவனாகிய சிவபெருமானுக்குரிய இடம், குளிர்ந்த நீரில் நல்ல செங்கயல்மீன்கள் விளங்கும் வயல்கள் சூழ்ந்த வேணுபுரம் ஆகும்.
பிறையும் தளிரும் உடையான். கூவிளம் - வில்வம். நளிரும் - குளிரும். மிளிரும் - விட்டு விட்டு விளங்கும், கண் மிளிரும் - கண்போல் விளங்கும் என்பதுமாம்.