முத்து பவளம் ஆகிய மணிகளை உடைய கடலில் எழுந்த நஞ்சினை உண்ட கண்டத்தை உடைய ஈசனுக்கு இடமாவது; இனிய தேன் நிறைந்ததும் மணம் நிறைந்ததுமான தாமரை மலரில் அன்னம் அலைகள் காற்று வீசத் துயில் கொள்ளும் வளம் நிறைந்த வேணுபுரம் ஆகும்.
காசு அக்கடல் - மணிகளையுடைய அழகிய பாற்கடல். இன் நறவவாசக் கமலம் - இனிய தேனையும் மணத்தையும் உடைய கமலம். அனம் - அன்னப்பறவை, இடைக்குறை. அன்னம் கமலத்தில் வலியஅலைகள் வீசுதலால் சிறுதுயில் கொள்ளும்.