பாம்பைக் கையில் கங்கணமாக அணிந்தவனும், மூங்கில் போன்று திரண்ட தோளினையும் குராமலர் அணிந்த கூந்தலினையும் உடைய உமையம்மையை ஒருகூறாக உடையவனும் ஆகிய சிவபிரானுக்கு இடம், மறையாதகொடையாளரும், தம்மோடு பழகியவர்களை நட்புக்கொண்டு ஒழுகுபவர்களும் ஆகிய நல்லோர் வாழும் வேணுபுரம் ஆகும்.
அரவு ஆர்கரவன் - பாம்பைக் கங்கணமாக அணிந்த கையினன். அமை - மூங்கிற்கணுக்களின் இடைப்பகுதியை. ஆர் - ஒத்த. திரள் - திரண்ட. குரவு - குராமலர்மாலை. `கரவாது உவந் தீயுங் கண்அன்னார்\\\\\\\\\\\\\\' (குறள் 1061). குழலாள் - கூந்தலையுடைய அம்பிகை. கூறன் - பாகத்தையுடையவன். கரவாத - மறைக்காத. கலந்தார் அவர்க்கு - கூடியவராகிய அவர்க்கு. விரவு ஆகவல்லார் - நட்பாக வல்லவர்கள் (வல்லவர்கள் வாழும் வேணுபுரம் என்க.)