மூங்கிலைப் போன்ற தோளையுடைய கமலவதியின் இடத்தில் கருப்பம் முற்றும் நாள் நிரம்பி, யாவரும் விரும்பி ஏற்கும் குழந்தையைப் பெறுதற்குரிய நேரத்தில், கால நிலைமை அறியும் கணிதர்கள் (சோதிடர்கள்) `ஒரு நாழிகை கழித்துக் குழந்தை பிறக்கு மாயின், இடம் அகன்ற மூவுலகங்களையும் ஆட்சி செய்யும்' என்று கூறிய அளவில், அதனால் ஒளி விளங்கும் அணியை அணிந்த அரசமாதேவியும்,
விழைவார் மகவு - யாவரும் விரும்பத்தக்க குழந்தை. உழையார் புவனம் ஒரு மூன்றும் - இடம் அகன்ற மூவுலகங்களும்.