எம்பெருமான் திருமேனியின் மீது இலைச் சருகுகள் விழாது தடுப்பதற்காக, நான் வருந்தி மேற்கட்டியாக அமைத்த நூல் வலையை, இவ் யானை அழிப்பதா? என்று, மிகவும் சினந்து எழுந்து, சிலந்தி மனம் புழுங்கி, யானையின் துதிக்கையினுள்ளே புகுந்து கடிக்க, அச்செயலால் அந்த யானை தன் துதிக்கையைத் தரையில் அடித்து, மோதி, நிலை குலைந்து விழுந்து இறந்தது.