முற்கூறிய அத்தகைய செயலால் அத்திருப்பதிக்குத் `திருவானைக்கா\' எனப் பெயர் வழங்க, ஞானமுடைய சிலந்தி ஒன்று அவ்விறைவரின் சிவந்த பொன் மயமான திருமுடியின் மீது கதிரவ னின் வெம்மையும் உலர்ந்த சருகுகளும் படாதவாறு, தன்னுள் கலந்த வாய் நூலினால், முடிமேல் கட்டும் நல்ல மேற்கட்டி போல விரிவுடைய தாய வலையை நெருங்கச் செய்து அமைத்தது.
முற்பிறவியில் மாலியவான் என்னும் பெயர் உடைய சிவகணமே சிலந்தியாய்த் தோன்றி இவ்வழிபாட்டைச் செய்தலின் `ஞானமுடைய சிலந்தி\\' என்றார் ஆசிரியர். கானல் விரவும் சருகு - வெப்பமும், வெண்நாவலில் பொருந்தி இருக்கும் சருகும். மேல் - திரு முடிமேல். நல் திருமேற்கட்டி - நல்ல அழகிய மேல் விதானம். ஆல் - அசைநிலை.