தெய்வத் தன்மை உடைய செம்பொன்னால் செய்யப்பெற்ற,பொன்னம்பலத்தில் நடம்புரியும் நடராசப் பெருமான் திருவடிகளை வணங்கி, பேரன்புடன், உள்ளம் உருகி நின்று வழிபட்டுவரும் நாளில், தொன்றுதொட்டுவரும் வாய்மை மறையவர்களாகிய தில்லைவாழந்தணர்களுக்குத் திருமாளிகைகள் பல எடுப்பித்து உதவினான்.