அவ்வகையிலான கோயில்கள் தோறும் இறை வற்குத் திருவமுதுக்குரிய படித்தரம் முதலான அனைத்துச் செயல் களுக்கும் வேண்டிய பெருஞ் செல்வங்களைத் தம் விருப்பத்திற் கிணங்கப் பெரிதும் அமைத்து, எல்லாத் திசைகளிலும் ஒப்பில்லாத தம் செங்கோல் ஆணை முறையைச் செலுத்தி நிறுத்தித், தேர்ப்படையை உடைய கோச்செங்கண்ணனார் முக்கண்களையுடைய இறைவர் திருக்கூத்து இயற்றுகின்ற முதன்மையுடைய திருத்தில்லையை நினைந்து அடைந்தார்.
இறைவற்குரிய திருவமுது முதலாக உள்ள அனைத்துச் செயற்பாடுகளுக்கும் (ஆண்டாண்டு தோறும் தவறாது நிகழ்வதற் கென) நிலங்களாகவோ பணமாகவோ உரிய பொருள்களாகவோ கொடுக்கப்படும் பொருள்கள் `அறக்கட்டளை' எனப்படும். நாள் வழிபாடும் சிறப்பு வழிபாடும் தொடர்ந்து நிகழ இவ்வறக்கட்டளைகள் பயன்பட்டு வரும் என்று நம் முன்னோர் கருதினர்.