பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கங்கள், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
68 கோச்செங்கட்சோழ நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
பாடல் எண் : 14

மந்திரிகள் தமைஏவி
    வள்ளல்கொடை அநபாயன்
முந்தைவருங் குலமுதலோ
    ராயமுதற் செங்கணார்
அந்தமில்சீர்ச் சோணாட்டில்
    அகல்நாடு தொறுமணியார்
சந்திரசே கரன்அமருந்
    தானங்கள் பலசமைத்தார்.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை :

கொடைச் சிறப்புடைய அநபாயப் பேரரசரின் முன்னோராக அமையும் குலமுதல்வரான முதன்மையுடைய கோச் செங்கண்ணனார், தம் அமைச்சர்களை அனுப்பி, சிறப்புமிக்க சோழ நாட்டில் அகன்ற பதிகள் தோறும் பிறையை ஏற்றருளும் சிவபெரு மான், விரும்பி எழுந்தருளுதற்கான அழகு நிறைந்த மாடக் கோயில் கள் பலவற்றையும் கட்டச் செய்தார்.

குறிப்புரை :

இச் சோழர் பெருமகனார் எடுப்பித்த கோயில்கள் 78 என நாவரசர் அருளியிருக்கவும், சேக்கிழார் அத்தொகை கூறாது `பல சமைத்தார்` என்றளவிலேயே கூறற்குக் காரணம், செய்த அறங்களைக் கணக்கிடலாகாது என்பது பற்றியும், நிறைவு செய்த கோயில்கள் மேற்கண்ட தொகைக்கு உரியன வேனும், மேலும் எடுப்பிக்க நினைந்த கோயில்கள் பலவாம் என்பது பற்றியும் ஆம் என விளக்கம் காண்பர் சிவக்கவிமணியார்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
As he was aware of the grace with which he was endowed
At Aanaikkaa in the past, he began to build there
A temple for the Lord whose divine hand sports
An antelope, and who would abide there in joy;
So with the Vennaaval tree ever-associated with Gnosis
He built a temple of ever-during goodliness,
For the Lord, the hue of whose neck is like
Unto a blue lily to get enshrined there.
Translation: T.N. Ramachandran

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
ma:nthirika'l thamaiaevi
va'l'lalkodai a:napaayan
mu:nthaivarung kulamuthaloa
raayamutha'r sengka'naar
a:nthamilseerch soa'naaddil
akal:naadu tho'ruma'niyaar
sa:nthirasae karanamaru:n
thaanangka'l palasamaiththaar.
சிற்பி