கொடைச் சிறப்புடைய அநபாயப் பேரரசரின் முன்னோராக அமையும் குலமுதல்வரான முதன்மையுடைய கோச் செங்கண்ணனார், தம் அமைச்சர்களை அனுப்பி, சிறப்புமிக்க சோழ நாட்டில் அகன்ற பதிகள் தோறும் பிறையை ஏற்றருளும் சிவபெரு மான், விரும்பி எழுந்தருளுதற்கான அழகு நிறைந்த மாடக் கோயில் கள் பலவற்றையும் கட்டச் செய்தார்.
இச் சோழர் பெருமகனார் எடுப்பித்த கோயில்கள் 78 என நாவரசர் அருளியிருக்கவும், சேக்கிழார் அத்தொகை கூறாது `பல சமைத்தார்` என்றளவிலேயே கூறற்குக் காரணம், செய்த அறங்களைக் கணக்கிடலாகாது என்பது பற்றியும், நிறைவு செய்த கோயில்கள் மேற்கண்ட தொகைக்கு உரியன வேனும், மேலும் எடுப்பிக்க நினைந்த கோயில்கள் பலவாம் என்பது பற்றியும் ஆம் என விளக்கம் காண்பர் சிவக்கவிமணியார்.