பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கங்கள், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
68 கோச்செங்கட்சோழ நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
பாடல் எண் : 13

ஆனைக் காவில் தாம்முன்னம்
    அருள்பெற் றதனை யறிந்தங்கு
மானைத் தரித்த திருக்கரத்தார்
    மகிழுங் கோயில் செய்கின்றார்
ஞானச் சார்வாம் வெண்ணாவ
    லுடனே கூட நலஞ்சிறக்கப்
பானற் களத்துத் தம்பெருமான்
    அமருங் கோயிற் பணிசமைத்தார்.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை :

திருவானைக்காவில் தாம் முற்பிறப்பில் திருவருள் பெற்றமையை அறிந்தவர் ஆதலால், அத்திருப்பதியில் மானை ஏந்திய கைகளையுடைய இறைவர் மகிழும் கோயிலை எடுப்பிப்பாராகி, மெய்ஞ்ஞானத்தின் சார்புடைய வெண்ணாவல் மரத்துடன் பொருந்த, நன்மை சிறந்தோங்க, நீலமலர் போன்ற கழுத்தையுடைய தம் இறைவர் வீற்றிருக்கும் கோயில் பணியைச் செய்து அமைத்தார்.

குறிப்புரை :

சம்பு முனிவர் உள்ளிட்ட பல முனிவர்களும் இருந்து தவம் செய்ததும், இறைவர் வெளிப்பட்டு அருளியதுமான சிறப்புக்கள் உடைமையின் `ஞானச்சார்பாம் வெண்ணாவல்` என்றார். இனித் தாம் ஞானச்சார்பு பெறுதற்காம் பொருட்டு கோயிற் பணியைச் செய்தார் எனப் பொருள் கோடலுமாம்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
As he was aware of the grace with which he was endowed
At Aanaikkaa in the past, he began to build there
A temple for the Lord whose divine hand sports
An antelope, and who would abide there in joy;
So with the Vennaaval tree ever-associated with Gnosis
He built a temple of ever-during goodliness,
For the Lord, the hue of whose neck is like
Unto a blue lily to get enshrined there.
Translation: T.N. Ramachandran

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
aanaik kaavil thaammunnam
aru'lpe'r 'rathanai ya'ri:nthangku
maanaith thariththa thirukkaraththaar
makizhung koayil seykin'raar
gnaanach saarvaam ve'n'naava
ludanae kooda :nalanjsi'rakkap
paana'r ka'laththuth thamperumaan
amarung koayi'r pa'nisamaiththaar.
சிற்பி