திருவானைக்காவில் தாம் முற்பிறப்பில் திருவருள் பெற்றமையை அறிந்தவர் ஆதலால், அத்திருப்பதியில் மானை ஏந்திய கைகளையுடைய இறைவர் மகிழும் கோயிலை எடுப்பிப்பாராகி, மெய்ஞ்ஞானத்தின் சார்புடைய வெண்ணாவல் மரத்துடன் பொருந்த, நன்மை சிறந்தோங்க, நீலமலர் போன்ற கழுத்தையுடைய தம் இறைவர் வீற்றிருக்கும் கோயில் பணியைச் செய்து அமைத்தார்.
சம்பு முனிவர் உள்ளிட்ட பல முனிவர்களும் இருந்து தவம் செய்ததும், இறைவர் வெளிப்பட்டு அருளியதுமான சிறப்புக்கள் உடைமையின் `ஞானச்சார்பாம் வெண்ணாவல்` என்றார். இனித் தாம் ஞானச்சார்பு பெறுதற்காம் பொருட்டு கோயிற் பணியைச் செய்தார் எனப் பொருள் கோடலுமாம்.