பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கங்கள், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
68 கோச்செங்கட்சோழ நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
பாடல் எண் : 12

கோதை வேலார் கோச்செங்கட்
    சோழர் தாம்இக் குவலயத்தில்
ஆதி மூர்த்தி அருளால்முன்
    அறிந்து பிறந்து மண்ணாள்வார்
பூத நாதன் தான்மகிழ்ந்து
    பொருந்தும் பெருந்தண் சிவாலயங்கள்
காத லோடும் பலவெடுக்குந்
    தொண்டு புரியுங் கடன்பூண்டார்.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை :

மாலை அணிந்த வேலையுடைய கோச்செங்கட் சோழனார், இம்மண்ணுலகத்தில் முதன்மை பொருந்திய சிவபெரு மான் திருவருளால், தம்முன்னைப் பிறப்பின் நிலையை உணர்ந்த நினைவுடன் பிறந்து, அரசாள்பவராய், உயிர்கட்குத் தலைவரான இறைவர், தாம் மகிழ்வுடன் பொருந்தி வீற்றிருந்தருளும் பேரருள் நிறைந்த கோயில்கள் பலவற்றையும் பெருவிருப்பத்துடன் எடுப்பிக் கும் திருத்தொண்டை மேற்கொண்டார்.

குறிப்புரை :

கோதைவேல் ஆர் - மாலையையுடைய வேலைப் பொருந்திய. பெருந்தண் சிவாலயம் - மாடக்கோயில். முற்பிறவியில் யானை பகையாய் இருந்தமையின் இப்பிறவியில் அவ்வினங்களில் யாதொன்றும் ஏற இயலாதவாறு கோயில் எடுப்பித்தனன். இவ்வாறு அமைந்த கோயில்களை மாடக்கோயில் என்பர். இவ்வகையில் அமைந்த கோயில்கள் 78 ஆகும். `பெருங்கோயில் எழுபதினோடு எட்டும்`(தி.6 ப.71 பா.5) எனவரும் நாவரசர் திருவாக்கால் இவ் வுண்மை அறியப்படும். `எண்தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது எடுத்தனன்` என்பர் ஆழ்வாரும்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
Ko-ch-Chengkat-Chola, the wearer of a garland
And the wielder of a spear, was, by the grace
Of the Primordial Lord, endowed with a consciousness
Of his former birth; he ruled over the earth
Poised in that awareness; he took upon himself
With all love, the duty of raising many spacious temples
Where the Lord of the Hosts would willingly abide.
Translation: T.N. Ramachandran

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
koathai vaelaar koachchengkad
soazhar thaamik kuvalayaththil
aathi moorththi aru'laalmun
a'ri:nthu pi'ra:nthu ma'n'naa'lvaar
pootha :naathan thaanmakizh:nthu
poru:nthum peru:ntha'n sivaalayangka'l
kaatha loadum palavedukku:n
tho'ndu puriyung kadanpoo'ndaar.
சிற்பி