தன் மனைவியான கமலவதி மகனைப் பெற்றெ டுத்து இறந்துவிடச், செங்கோன்மையுடைய சோழனான `சுபதேவன்\', தன் உயிர் போன்ற அம்மகனை வளர்த்து, உரிய வயதில், அழகு பொருந்திய முடியைப் பொருந்திய தனயன் என்னும் உரிமைப்படி, முடிசூட்டி, அரசன் எனும் பட்டம் தந்து, தானும் விரும்புதற்குரிய பெரிய தவம் செய்தல் எனும் குற்றம் இல்லாத நெறியை மேற் கொண்டு, அதன் பயனாக இறைவரின் இருக்கையான சிவலோகத்தை எய்தினன்.
உரிமை முடி - தந்தை தனயன் என்னும் வழிவழி வரும் உரிமை மரபால் முடிசூட்டி.