பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கங்கள், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
68 கோச்செங்கட்சோழ நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
பாடல் எண் : 1

துலையிற் புறவின் நிறையளித்த
    சோழர் உரிமைச் சோணாட்டில்
அலையில் தரளம் அகிலொடுசந்
    தணிநீர்ப் பொன்னி மணிகொழிக்கும்
குலையில் பெருகுஞ் சந்திரதீர்த்
    தத்தின் மருங்கு குளிர்சோலை
நிலையில் பெருகுந் தருமிடைந்த
    நெடுந்தண் கானம் ஒன்றுளதால்.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை :

துலையின் தட்டில் வைத்துப் புறாவின் எடைக்கு ஒப்பத் தன் உடலின் தசையை அறுத்து வைத்து, நிறுத்துக் கொடுத்த, பேரரசர் சிபியின் மரபில் வரும் சோழர்களுக்கு உரிமையாயுள்ள சோழ நாட்டில், அலைகளால் முத்துக்களையும், அகிலுடன் சந்தன மரத்தையும் கொண்டு வரும் அழகான நீரையுடைய காவிரியாற்றின் மணிகளை ஒதுக்கும் கரையில் பெருகும் சந்திர தீர்த்தத்தின் அருகில், குளிர்ச்சியையுடைய சோலைகளில் நிலையாக வளர்கின்ற மரங்கள் நெருங்கிய நீண்ட குளிர்ந்த காடு ஒன்று இருந்தது.

குறிப்புரை :

துலை - தராசு. சிபி என்பார் சோழர் குலத்தில் தோன்றிய பேரரசர் ஆவர். இவர் சீகாழியில் வேள்வி செய்த பொழுது, இறைவர் இவர்தம் பண்பை விளக்குதற்காகத் திருவுளம் கொண்ட வகையில், தீக்கடவுள் ஒருபுறாவாகவும், இந்திரன் அதனைத் துரத்தி வரும் பருந்தாகவும் வரப், புறா தன்பால் அடைக்கலம் புக, அது தன் இரையென உரிமை கொண்டாடிய பருந்துக்கு, அப்புறாவின் எடையளவு தன் உடலை ஈந்து அளித்தனன். இவ்வரலாறே ஈண்டுக் குறிக்கப்படுகிறது. சந்திர தீர்த்தம் - தக்கன் வேள்வியில், சந்திரன் தனக்குற்ற குறையைத் தீர்க்க, தீர்த்தம் உண்டாக்கி, வழிபட்டு நன்மை அடைந்தான். ஆதலில் அவன் பெயர் அமைந்த நீர்நிலை உருவாயிற்று.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
In the Chola country of the Cholas who came in the line
Of Emperor Cibi, who to save a dove, chopped off and placed
In the pan of the scale his flesh equalling its weight,
Near Chandra Theertha situate on the bank
Of the beautiful Cauvery whose waters
Shore up by their waves pearls, eagle-wood,
Sandal-wood and gems, is a cool and stately forest,
Rich in cool gardens thick with good many a tree
Flourishing well for ever.
Translation: T.N. Ramachandran

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
thulaiyi'r pu'ravin :ni'raiya'liththa
soazhar urimaich soa'naaddil
alaiyil thara'lam akilodusa:n
tha'ni:neerp ponni ma'nikozhikkum
kulaiyil perukunj sa:nthiratheerth
thaththin marungku ku'lirsoalai
:nilaiyil peruku:n tharumidai:ntha
:nedu:ntha'n kaanam on'ru'lathaal.
சிற்பி