மெய்ப்பொருள் மொழிதலில் வேந்தராய நாவரசர், தேவரின் தலைவரான இறைவரின் திருமாணிகுழி, திருத்தினைநகர் ஆகிய திருப்பதிகளுக்கும் விரும்பிச் சென்று, எவ்வுயிர்களும் விரும்புதற்குரிய சொல் மாலைகளால் போற்றி செய்து, மலர்கள் மலர்கின்ற சோலைகளின் மணமானது தம் திருவடியில் பொருந்தும் படி நடந்து சென்று, திருக்கெடிலத்தைக் கடந்து வந்து சேர்ந்தார்.
திருமாணி குழியிலும், திருத்தினை நகரிலும் அருளப் பெற்ற பதிகங்கள் கிடைத்தில.