மேலும், இவை போன்ற செழுமையான தமிழ்ப் பதிகங்களைப் பாடி, அப்பதியில் தங்கிப் பின், வெற்றியும் இளமையும் மிக்க ஆனேற்றினையுடைய திருவதிகை வீரட்டானத்தில் வீற்றிருக் கும் இறைவரின், திருவடிகளில் தம் நினைவில் மிகவும் பொருந்திய தோர் காதல் எழுந்ததால், அங்கு நின்றும் சென்று, பகைவரின் முப்புரங் களையும் எரித்த வீரட்டானத்து இறைவர் வீற்றிருந்தருளும் திருவதி கைப் பதியினைச் சென்று அடைபவராய்,
`மற்றும் இனையன வண்டமிழ் மாலைபாடி` என்பதால் மேலும் பல பதிகங்கள், இத்திருப்பதியின்கண் அருளப்பெற்றிருக் கலாம் எனத் தெரிகின்றது. எனினும் அவை கிடைத்தில.