பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கங்கள், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
00 பாயிரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தய பாடல் மொத்தம் 349 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்
பாடல் எண் : 4

மதிவளர் சடைமுடி மன்று ளாரைமுன்
துதிசெயும் நாயன்மார் தூய சொல்மலர்ப்
பொதிநலன் நுகர்தரு புனிதர் பேரவை
விதிமுறை உலகினில் விளங்கி வெல்கவே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை :

இளம்பிறை வளர்தற்கு இடனாய திருச்சடையை உடைய கூத்தப்பிரானை எண்ணியும், வாழ்த்தியும், வழிபட்டும் உய்ந்த நாயன்மார்களின் தூய, சொல்மலர்களால் ஆகிய இவ்வரலாற் றில், பொதிந்து கிடக்கும் சொற்பொருள்களின் சுவை நலன்களை நுகர்ந்துகொண்டிருக்கும் புனிதமான, திருத்தொண்டர்கள் வதிந்தரு ளும் இப்பேரவை, இறைவனின் ஆணைவழி நின்று இவ்வுலகில் விளக்கமும் வெற்றியும் தந்து வளர்வதாகுக.

குறிப்புரை :

முன் துதி செயும் நாயன்மார் - முன்னியும் (எண்ணியும்), வணங்கியும் வாழ்ந்த அடியவர்கள். முன் - முன்னதாக எனப் பொருள் கொண்டு, அடியவர்கள் தம் செயல்கட்கு எல்லாம் முன்னதாக இறை வழிபாட்டை ஆற்றும் பெற்றியர் எனினும் அமையும். முன் - வழிபடுதலில் தாம் எல்லோர்க்கும் முன்னதாக எனப் பொருள் கொள்வதும் அமையும். `நம்மில் பின்பல்லது எடுக்க ஒட்டோம்` என வரும் திருவாசகமும் (தி.8 திருப்பொற். பா.5) காண்க. பொதி நலன் - சொற்பொருள்களின் சுவை நலன். ஏனைய நூல்களிலன்றி இந்நூலினிடத்தேயே, பொதிந்து நிற்கும் பத்திச் சுவை எனினும் அமையும். அன்றி இச்சொற்பொருள்களின் இடனாகவும், இவற்றிற்கு மேலாகவும் பொதிந்து நிற்கும் இறையின்பம் எனினும் அமையும். நாயன்மார் தூய சொல் மலர் - நாயன்மார்களால் அருளிச் செய்யப்பட்ட திருமுறைகள். நாயன்மார்களைப் பற்றிய திருமுறை என இரு வகையானும் பொருள்கொள நின்றது. இவ்வாற்றான் பன்னிரு திருமுறைகளும் அடங்குவவாயின. நுகர்தரு - நுகர்ந்தும், நுகர்ந்துகொண்டும், இனி நுகரவும் இருக்கின்ற: வினைத் தொகை விதிமுறை. இறைவனின் ஆணைவழி. பேரவை - இத்தகைய புனிதர்கள் இருக்கும் பேரவையே பேரவையாம். அன்றி வெறும் எண்ணிக்கையால் மட்டும் பெருகி நிற்கும் பேரவை, பேரவையாகாது என்பதாம். அது, பேருக்கு அவையாம்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
The Holy Assembly
May the lofty and sublime Assembly
Of the holy devotees who revel
In the wealth and weal
-- The pure flower-words of Nayanmar
Who have, of yore, hymned the Lord of Ambalam
Whose matted hair sports the crescent --,
For ever triumphantly flourish, and run
Their destined course illuminant in the world!
Translation: T.N. Ramachandran

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
mathiva'lar sadaimudi man'ru 'laaraimun
thuthiseyum :naayanmaar thooya solmalarp
pothi:nalan :nukartharu punithar paeravai
vithimu'rai ulakinil vi'langki velkavae.
சிற்பி