பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கங்கள், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
00 பாயிரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தய பாடல் மொத்தம் 349 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்
பாடல் எண் : 3

எடுக்கும் மாக்கதை இன்றமிழ்ச் செய்யுளாய்
நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத்
தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள் முடிக்
கடக்க ளிற்றைக் கருத்துள் இருத்துவாம்.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை :

பிறவிக் கடலினின்றும் உயிர்களை எடுத்து உய்யக் கொள்ளும் இத்திருத்தொண்டர் புராணம், இனிய தமிழ்ப் பாடல்களாக நிறைவுற்று, இந்நிலவுலகில் மேதக்க அருளை வழங்கிட, ஐந்து திருக் கைகளையும், தாழ்ந்த செவிகளையும், நீண்ட முடியினையும் உடைய மதம்பொருந்திய யானைமுகக் கடவுளை மனத்தில் இருத்தி வணங் குவாம்.

குறிப்புரை :

எடுக்கும் மாக்கதை - பிறவிக் கடலினின்றும் எடுக்கும் இப் பெருங்கதை. `என்னை இப்பவத்தில் சேரா வகையெடுத்து` (சித்தி. -பாயிரம் 3) என வருவதும் காண்க. இனி எடுத்துச் சொல்லப்படு கின்ற இம்மாக்கதை எனினும் அமையும். மாக்கதை - பெரியபுராணம். இப்பெயருடன் இந்நூல் வழங்குதற்கு இத்தொடரே காரணமாகும். நடக்கும் - நடத்தற் பொருட்டு: அஃதாவது நிறைவேறுதற் பொருட்டு. மூத்த பிள்ளையார் திருக்கரங்கள் ஐந்தனுள், ஒன்று மோதகம் ஏந்தி நிற்கும். ஒன்று இரத்தினக் கலசம் ஏந்தி நிற்கும். இது தம் தாய் தந்தையர்க்குக் காட்டும் உபசாரத்திற்கு ஆகும். நிறை குடம் காட்டி வரவேற்கும் வழக்கை நினைக. மற்றொன்று கயாசுரனை அழித்தற்குத் தம் கொம்பினை ஒடித்து நிற்கும். ஏனைய இரண்டனுள் ஒன்று கயிற்றையும், மற்றொன்று தோட்டியையும் கொண்டு நிற்கும். உயிர்கட்குற்ற தீங்கை நீக்குதற்கு இவ்விரு கைகளும் உதவுகின்றன. கடம் - மதநீர். யானை என்னும் பொதுமை பற்றி இவ்வாறு கூறப்பட்டது.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
To come by the grace that will guide us to indite
The great hagiology in dulcet Tamil verse,
We enshrine in our thought
The ichorous Tusker-God endowed with
A pentad of arms -- long and strong --,
Dangling ears and a huge crown.
Translation: T.N. Ramachandran

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
edukkum maakkathai in'ramizhch seyyu'laay
:nadakkum maenmai :namakkaru'l seythidath
thadakkai ai:nthudaith thaazhsevi :nee'l mudik
kadakka 'li'r'raik karuththu'l iruththuvaam.
சிற்பி