பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கங்கள், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
00 திருமலைச் சருக்கம் 5. தடுத்தாட்கொண்ட புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தய பாடல் மொத்தம் 349 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்
பாடல் எண் : 154

குலமுத லறிவின் மிக்கார்
   கோத்திர முறையுந் தேர்ந்தார்
நலமிகு முதியோர் சொல்லச்
   சடங்கவி நன்மை யேற்று
மலர்தரு முகத்த னாகி
   மணம்புரி செயலின் வாய்மை
பலவுடன் பேசி ஒத்த 
    பண்பினால் அன்பு நேர்ந்தான்.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை :

தம் குலத்திற்குரியோரை வழிவழியாக அறிந்து வரும் மரபினையுடைய அறிவு மிக்கோரும், கோத்திரங்களின் வரலாற்றை நன்கு உணர்ந்தவருமாகிய நலம் பொருந்திய தம் சுற்றத்தாருள் முதிய பெரியவர்கள் சொல்ல, சடங்கவியாரும் அவ் வுறவு தமக்கு நன்மை உடையது என ஏற்று, மகிழ்ச்சி பொருந்திய முகத்தராகி, திருமணம் செய்தற்குரிய முறைமைகள் பலவற்றையும் ஒருங்கு பேசி முடித்து, தம் மகட்கும் வரும் மணவாளருக்கும் உரிய ஒத்த பண்புகள் உளவாதலைக் கண்டு தம் மகளைக் கொடுக்க இசைந்தார்.

குறிப்புரை :

குலம் - ஒழுக்கத்தால் சிறந்துவரும் இயல்புடைமை. `ஒழுக்கம் உடைமை குடிமை` (குறள், 133), `குலஞ் சுடும் கொள்கை பிழைப்பின்` (குறள், 1019) எனவரும் திருக்குறட் பாக்களையும் காண்க. `கோத்திரம் - இதனுள் வரும் சில பிரிவு. ஆதி சைவருக்குரிய கோத்திரங்கள் ஐவகைப்படும் என்பர். அவை: கௌசிகர், காசிபர், பரத்துவாசர், கௌதமர், அகத்தியர் என்னும் ஐந்து இருடிகளின் பெயர்களால் வரும் கோத்திரங்களாம். இக்கோத்திரங்கள் ஒவ்வொன் றின் வழித்தோன்றிய கிளைக் கோத்திரங்களும் உள என்பர். ஒரே கோத்திரத்தில் மகட்கோடல் தகாது என்பர். ஒத்த பண்பு - தலைமகனுக் கும் தலைமகளுக்கும் உரிய ஒத்த பண்பு. `பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு, உருவு நிறுத்த காம வாயில், நிறையே அருளே உணர்வொடு திருவென, முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே` (தொல்.மெய்ப்.25), என்னும் தொல்காப்பியமும்.
பிறப்பு - குடிப்பிறப்பு. குடிமை - அதற்குத்தக்க ஒழுக்கமுடைமை. ஆண்மை - ஆளும் தன்மை: பெண்டிரும் ஆடவரும் தத்தமக்குரிய பண்பை என்றும் இழக்காது ஆளும் தன்மை: தம் குடியை ஆளும் ஆற்றல். ஆண்டு - பெண்மை பிறத்தற்கு ஏதுவாய பன்னீராண்டும், ஆண்மை பிறத்தற் கேதுவாய பதினாறாண்டுமாக அமைதல். உரு - பிறழ்ச்சியின்றியமைந்த வடிவு. நிறுத்த காம வாயில்- பெண்மை வடிவும் ஆண்மை வடிவும் அங்ஙனம் பிறழ்ச்சியின்றி அமைந்த வழி அவற்று மேல் நிகழும் இன்பத்திற்கு வாயிலாகிய அன்பு. நிறை - மறை பிறரறியாமை நெஞ்சினை நிறுத்துதல். அருள் - எவ்வுயிர்க்கும் இடுக் கண் செய்யாத அருள் உடைமை. உணர்வு - உலகியலால் செய்யத் தக்கதும் தவிரத் தக்கதுமாயவற்றை அறிதல். திரு - பொருளுடை மையும் பொருள் கொணர்ந்து துய்த்தலுமின்றி எஞ்ஞான்றும் திருத்தகவிற்றாயதோர் உள்ள நிகழ்ச்சி (தொல். மெய். 25) எனவரும் பேராசிரியர் உரையும் இங்கே கருதத் தக்கதாம்.மணம்புரி செயலின் வாய்மை - திருமணத்திற்குரிய நாள், இடம், மணநாளுக்கு முன்னும் பின்னும் செய்து கொள்ளும் செயல் வகைகள், சிறப்பு வகைகள் முதலியன.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
When the revered elders of reputed clan and family
Who knew full well of the course and source of Gotra,
Announced the purpose of their errand
To Sadangkavi, he received them well, and his face
Beamed in joy; he discussed with them
All that pertained to marriage and expressed his consent.
Translation: T.N. Ramachandran

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
kulamutha la'rivin mikkaar
koaththira mu'raiyu:n thaer:nthaar
:nalamiku muthiyoar sollach
sadangkavi :nanmai yae'r'ru
malartharu mukaththa naaki
ma'nampuri seyalin vaaymai
palavudan paesi oththa 
pa'npinaal anpu :naer:nthaan.
சிற்பி