பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கங்கள், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
00 திருமலைச் சருக்கம் 5. தடுத்தாட்கொண்ட புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தய பாடல் மொத்தம் 349 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்
பாடல் எண் : 152

பெருமைசா லரசர் காதற்
   பிள்ளையாய்ப் பின்னுந் தங்கள்
வருமுறை மரபின் வைகி
   வளர்ந்துமங் கலஞ்செய் கோலத்
தருமறை முந்நூல் சாத்தி
   யளவில்தொல் கலைகள் ஆய்ந்து
திருமலி சிறப்பின் ஓங்கிச்
   சீர்மணப் பருவஞ் சேர்ந்தார்.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை :

பெருமை மிகுந்த அந்நரசிங்க முனையரின் பேரன்புக்குரிய திருமகனாராய் வாழ்ந்து வருவதோடு, அதன் பின்னும் தம்முடைய ஆதிசைவ மரபில் கொண்டு ஒழுகத் தகும் ஒழுக்கங்களையும் கொண்டு வளர்ந்து, முந்நூல் அணியும் காலம் வர, அதனையும் அம்மரபு வழி நின்று ஏற்று, எண்ணிறந்த மறை முதலாய நூல்களையும் கற்றுத் தெளிந்து, செல்வம் தழைய நிற்கும் சிறப்பைப் பெற்றுச் சிறப்புமிக்க திருமணப் பருவத்தை அடைந்தார்.

குறிப்புரை :

அரசர் மரபில் வளர்ந்தும், ஆதி சைவ நெறியை விடாது பின்பற்றி வளரவும், வளர்க்கப்பட்டதும் ஆய அருமை எண்ணற் குரியதாம். முந்நூல் அணிதலை உபநயனம் என்பர். உபநயனம் - மேலும் பெறும்கண். முன்னரே உள்ள இருகண்களுடன், புருவ நடுவில் இறைவனை இடையறாது எண்ணுவதால் திறக்கப்படும் கண் இதுவாகும். காயத்திரி மந்திரத்தையருளி இம்முந்நூலையும் அணிவர்.
காயத்திரி - வினைவிளைவையறுத்து மேலும் பிறப்பில்லா தாக்குவது. இம் மந்திரத்தால் குறிக்கப் பெறுபவர் சிவபெரு மானேயாவர்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
He grew as the beloved son of the glorious king
Firm-rooted in the culture and tradition of his lineage;
In due time he was invested with the sacred thread;
He mastered all the boundless and hoary scriptures
And glowed with learning and wealth.
He now attained the age proper for marriage.
Translation: T.N. Ramachandran

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
perumaisaa larasar kaatha'r
pi'l'laiyaayp pinnu:n thangka'l
varumu'rai marapin vaiki
va'lar:nthumang kalanjsey koalath
tharuma'rai mu:n:nool saaththi
ya'lavilthol kalaika'l aay:nthu
thirumali si'rappin oangkich
seerma'nap paruvanj saer:nthaar.
சிற்பி