பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கங்கள், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
00 திருமலைச் சருக்கம் 5. தடுத்தாட்கொண்ட புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தய பாடல் மொத்தம் 349 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்
பாடல் எண் : 149

மாதொரு பாக னார்க்கு
   வழிவழி யடிமை செய்யும்
வேதியர் குலத்துள் தோன்றி
   மேம்படு சடைய னாருக்கு
ஏதமில் கற்பின் வாழ்க்கை
   மனையிசை ஞானி யார்பால்
தீதகன் றுலகம் உய்யத்
   திருவவ தாரஞ் செய்தார்.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை :

உமையம்மையாரை ஒரு கூற்றில் கொண்ட சிவபெருமானுக்கு வழிவழியாக அகத்தடிமை செய்து ஒழுகும் ஆதி சைவர் குலத்தில் தோன்றிய மேம்பட்ட சடையனாருக்குக், குற்றமற்ற கற்பினை உடைய வாழ்க்கைத் துணைவியாராகிய இசைஞானியா ரிடத்து, உலகிலுள்ள உயிர்கள் யாவும் தீநெறியினின்றும் நீங்கி நன்னெறி அடைய ஒரு பெருமகனார் தோன்றியருளினார்.

குறிப்புரை :

தாய் தந்தை ஆகிய இருவர்தம் மரபில் வந்த முன்னோர்களும் இறைவற்கு அடிமை செய்து வந்தவர்கள் ஆதலின் வழியடிமை என்னாது `வழிவழியடிமை` என்றார். `இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி` (தி.11 திருமுரு. வரி.178) என நக்கீரர் சிறப்பிப்பதும் காண்க. `மழவிடை யாற்கு வழிவழி ஆளாய்` (தி.9 ப.29 பா. 11) என்னும் திருப்பல்லாண்டும். இறைவனை அகத்தும் புறத்தும் வைத்து வழிபடும் உரிமையும் தகுதியும் உடையவர்கள் ஆதிசைவ மரபினர் ஆவர். திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவரை நாள் வழிபாட்டிலும், சிறப்பு வழிபாட்டிலும், தீண்டி வழிபடும்பேறும் இவர்கட்குண்டு. அம்மரபில் தோன்றியவர் சடையனார் என்பார் `மேம்படு சடையனார்` என்றார். ஏதம் இல் கற்பு - குற்றம் தீர்ந்த கற்பு; அறக்கற்பு. `மறுவில் கற்பின் வாள்நுதல் கணவன்` (தி.11 திருமுரு. வரி 6) எனவரும் நக்கீரர் கூற்றும் காண்க. கமலாபுரத்தில் (திருவாரூரில்) சிவகோதம கோத்திரத்தில் ஞான சிவாசாரியார் குடும்பத்தில் தோன்றியவர் இவர் என்பது கல்வெட்டுக்களால் அறியப் படுவ தொன்றாம். (73 of 95. S.I.I. Vol & Vol 11. p. 153)

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
In the clan of Siva-Brahmis who serve Ammai-Appar
In unbroken tralatitious sacerdocy, he did divinely
Incarnate, to uplift the world freed of its flaws,
As the son of lofty and noble Sadaiyanar
And his immaculate wife Isaignaniyar.
Translation: T.N. Ramachandran

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
maathoru paaka naarkku
vazhivazhi yadimai seyyum
vaethiyar kulaththu'l thoan'ri
maempadu sadaiya naarukku
aethamil ka'rpin vaazhkkai
manaiyisai gnaani yaarpaal
theethakan 'rulakam uyyath
thiruvava thaaranj seythaar.
சிற்பி