பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கங்கள், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
00 திருமலைச் சருக்கம் 5. தடுத்தாட்கொண்ட புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தய பாடல் மொத்தம் 349 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்
பாடல் எண் : 148

பெருகிய நலத்தால் மிக்க 
    பெருந்திரு நாடு தன்னில்
அருமறைச் சைவ மோங்க
   அருளினால் அவத ரித்த
மருவிய தவத்தான் மிக்க
   வளம்பதி வாய்மை குன்றாத்
திருமறை யவர்கள் நீடுந்
   திருநாவ லூரா மன்றே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை :

நிறைந்த பல வளங்களால் மேம்பட்ட பெருமை மிகுந்த அத்திருமுனைப்பாடி நாட்டில், அரிய மறைகளின் பிழிவாக விளங்கும் சைவநெறி மேன்மேலும் செழிக்க, சிவபெருமானின் திருவருளினால் நம்பியாரூரர் தோன்றுதற்கு இடனாக விளங்கும் மேதக்க தவம் நிறைந்ததும், மேம்பட்ட நலங்களை உடையதும் ஆகிய திருப்பதி, மெய்ந்நெறியினின்றும் வழுவாத மறையவர்கள் மிக்கிருக் கும் திருநாவலூர் என்னும் திருப்பதியாகும்.

குறிப்புரை :

ஒரு நாட்டின் வளம் அங்குள்ள நிலத்தானும், நீரானும் மட்டும் அமைவதன்று; அங்குள்ள பெருமக்களாலும் அமைவதாகும். `எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே` (புறநா. 187), `ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழுமூரே` (புறநா. 191) என்றற் றொடக்கத்தனவாய கூற்றுக்களையும் காண்க. இவ்வகையில் திருமுறை ஆசிரியராகிய இவரும், நாவரசரும் தோன்றியதும், சந்தான ஆசிரியர்களில் மெய்கண்டார், அருணந்தி சிவாசாரியார் ஆகிய இருவரும் தோன்றியதும் ஆன பெருமை இந்நாட்டிற்கு உண்டு. நாவலூரர் தோன்றவும், மறை வல்லுநர்கள் வாழவும் இடனாக விளங்குவது திருநாவலூர் என இப்பாடல் இருவகையானும் சிறப்பித் துள்ளமை அறியத்தக்கதாம். அருமறைச் சைவம் - அரிய மறைகளின் முடிபாக விளங்கும் சைவம்; `வேதப் பயனாம் சைவமும்` (தி.12 பு.20 பா.9) எனப் பின்னர் வருதலும் காண்க. அன்று, ஏ என்பன அசை நிலைகள்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
In that great land, beauteous and prosperous, is a town
Endowed with the wealth of tapas immense
Meriting the avatar of him who would cause
The flourishing of the Vedic Saivism; it is indeed
Tirunavaloor, the eternal abode of Brahmins
Who would never from the path of truth swerve.
Translation: T.N. Ramachandran

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
perukiya :nalaththaal mikka 
peru:nthiru :naadu thannil
aruma'raich saiva moangka
aru'linaal avatha riththa
maruviya thavaththaan mikka
va'lampathi vaaymai kun'raath
thiruma'rai yavarka'l :needu:n
thiru:naava looraa man'rae.
சிற்பி