``மருகலால்`` எனப் பின்னர் வருதலால் முன் இரண்டடிகளும் அவரைப்
பற்றியவேயாயின.
மருகல், சோழநாட்டுத் தலம்.
அறம் ஆய்வர் - அற நூலை ஆராய்ந்து
விளக்குவார்.
அறங் களில் ஆசாரம் அல்லது தூய்மையும் ஒன்று ஆகலின், `அறம் ஆய்வ ரேனும்
அங்கம் (எலும்பை) அணிவர்; இஃது அவர்க்குப் பொருந் துமோ` என ஐயுற்றார் போலக் கூறினார்.
தூய்தல்லாத பொருளைப் பற்றிய போதிலும் அதனால் நெருப்பு வாதிக்கப் படாமைபோல, அவர்
எதனாலும் வாதிக்கப்படாமை கூறியவாறு.
அடு காடு - சுடு காடு.
அறம் ஆனார் - அறுதியாயினார்.
தனிச் சீரில் உள்ள அறம்,
சிவதருமம்.
அது செய்தற்கு அரிதாகலின், ``வல்வினைகள்`` என்றார்.
வாரா - வரப்பெற்று.
ஈற்றடியில் உள்ள வல்வினைககள், வலிய இருவினைகள், `அவை வாராதவாறு சிவதருமம் வாய்க்கப்
பெற்று, வளப்பம் பொருந்திய `திருமருகலார்` எனச் சொல்லித் துதிக்க.
``என்ன`` என்பது அகர
ஈற்று வியங்கோள்.
`என்க` எனப் பாடம் ஓதலும் ஆம்.