`ஈசனது திண் தோள்திசை அடையும்; திருமேனி ஆகாசம் அடையும்.
திருமுடி (சிறப்பு வாய்ந்த சிரம்) அண்டம் அடையும்.
கால் பாதாளம் (அடையும்) அவனுக்கு ஆடை
கடல்.
``தூநீர் - வளைநரல் பௌவம் உடுக்கையாக, விசும்பு மெய்யாகத் திசை கையாக`` * எனப்
பழம் புலவரும் கூறினார், அங்கி (அக்கினி) போலும் அழகிய சடா மகுடத்தில் நீர் (உள்ளது.
)
கண்கள் மூன்று சுடர்` - என இயைத்துக் கொள்க.
பெருமானது திருவடிவைப் புகழ்ந்த வாறு.
``அடையும்`` என்பதைப் ``பாதாளம்`` என்பதோடும் கூட்டுக.