கலை மானை ஏந்திய ஏனத்தின் (பன்றியின்) கொம்பாகிய பூண் இவற்றுடன்
காணப்படுகின்ற கயிலைப் பெரியோனால் (மான் - பெரியோன்).
அடி-2ல் மான் (நின் மகள்) கலைக்
கறை - ஆடைபற்றிய குற்றத்தில்.
கவாலி - அவனேயாயினார்.
(அஃதாவது, உடையில்லாதவள்
ஆயினாள்.
ஆடையின் குற்றம் - ஆடை அணியாமை.
(``கவாலி`` என்பதன் பின் `ஆயினாள்`
என்பது எஞ்சி நின்றது.
இனி) அரன் - அவன்.
பொன் அம்பலத்துள் கலைமான, ஆடற்கலையும்
பாடற்கலையும் பெருமையுறும் வண்ணம் ஆடுவதும், பாடுவதும் (அல்லது இவளை நோக்குகின்றான்
இல்லை.
நோக்காவிடினும் இவளது உயிரைக் கொள்ளாதபடி) காலனை (யமனை) ஆடுவதும்
ஆடான் அழித்தலையும் செய்யான்.
(நாம் என் செய்வது!) ஈற்றடியில் `அடுவது, அடான்` என்பன
முதல் நீண்டு நின்றன.
இது தலைவியது வேறுபாடு கண்டு வினவிய நற்றாய்க்குச் செவிலி
அறத்தொடு நின்றது.