மயல், நோக்கத்தால் புலப்படுதல் இயல் பாகலின் அது கண்களை மயலை
உடையன போல வைத்து, ``மயலான கண்ணியர்`` என்றார்.
இத்தொடர் மகளிரைக் குறித்தல்
சொல்ல வேண்டா.
பாகு ஆர் - அவர்கட்குச் சருக்கரையை ஒத்தவன்.
கனி ஏர்- மற்றும்
கனியையும் ஒப்பவன்.
கடி - நறுமணம்.
கண்ணி - முடியில் அணியும் மாலை.
``கடிக்கொன்றைக் கண்ணியான்`` என்பது, `சிவன்` என்னும் அளவாய் நின்றது, கல் - போற்றக்
கற்றுக்கொள்.
(`நெஞ்சே, நீ` - என்பது வருவித்துக் கொள்க.
) ஏனெனில், அவையே மயல் ஆன-
உலகத்தைப் பற்றி மயக்கங்கள் பலவும் தீர்தற்கு உரிய மருந்தாகும்.
மற்றும் - மேலும்.
மயல்
ஆனார் - சிவபெருமானைப் பற்றிய ஆசை நீங்காதவர்கள்.
ஆரூர் மயரார் - அவனது திருவாரூரை
மறக்க மாட்டார்கள்.