ஈற்றில், `உம்மை` என்பது இடைக் குறைந்து, ``உமை`` என வருதலால்
அதற்கேற்பப் ``பிரான்`` என்பவற்றை அண்மை விளியாக்கி, `உமது இடபம் மால்` எனவும், `உமது வில்
மந்தரம்` எனவும், நீர் இட; பம் - பேரொலி நாண் நாகம்` எனவும், `உமது இட அம் உமை பேணும்`
எனவும், `நீர் இட, அம், பெரிய புன்சடைமேல் அமர்ந்து உம்மைப் பேணும்` எனவும் உரைக்க.
மால்
- விட்டுணு.
`மந்தரம்` என்பது நீட்டல் பெற்றது.
இரண்டாம் அடியில், ``பம்`` என்பது
ஒலிக்குறிப்பு.
நாண் - வில் நாண்.
தனிச்சீரில், அம், அழகு.
அதன் முதல் வகர
உடம்படுமெய் பெற்று `வம்` என வந்தது.
எதுகை நோக்கி, ``பம்`` எனத் திரிந்தது.
அழகு
ஆகுபெயராய் உடம்பைக் குறித்தது.
ஈற்றடியில் அம் - நீர்; கங்கை.