`உலகீர்` என்பதை முதற்கண் வருவித்து, தனிச் சீரில் உள்ள ``ஒன்றுரைத்து``
என்பதை, ``உறுதுணையாம்`` என்பதற்கு முன்னே கூட்டி, அவ்விரண்டையும் இறுதிக்கண் வைத்து
உரைக்க.
``ஒன்று`` மூன்றில் முதற்கண்ணது, ஒருபொருள்.
இடையது, யாம் சொல்கின்ற
ஒன்று.
அது சிவபெருமானது திருப்பெயர்.
ஈற்றில் உள்ளது.
பிறழ்தல் இல்லாத ஒரு
சொல்.
அது, `நீவிர் விரும்பியதைத் தருகின்றோம்` என அருளிச் செய்வது.
``அரவம்``
இரண்டில் முன்னது, பாம்பு; பின்னது ஆரவாரம்; பழிச்சொல்.
அவை, `பாம்பை அணிகின்றான்,
தலையோட்டில் பிச்சை ஏற்று உண்கின்றான்` என்றாற் போல்வன.
`உலகீர் அவனது பெருமையை
யறியாமல் அறிவலாதாரால் இகழப்படுகின்ற சிவபிரானது திருப்பெயரைச் சொல்வீராயின், அவன்
நீவிர் விரும்பியதைத் தப்பாமல் பெறும் வரத்தை அருளுவான்`.
பல பொருள்களை உரைத்தல்,
உண்மையை உணராது அலமருதலாலாம்.
ஓயாது - மெலியாமல்.