சுந்தரர் , திருஈங்கோய்மலை முதலாகப் பல தலங்களைத் தொழுது , கொங்குநாட்டில் காவிரியின் தென்கரையில் உள்ள திருப்பாண்டிக் கொடுமுடி அணைந்து , கோயில்முன் குறுகி , வணங்கி , ` இங்கிவர் தம்மை மறக்கவொண்ணாது ` என்று உள்ளத் தில் எழுந்த குறிப்பினால் திருவைந்தெழுத்தை அமைத்துப் பாடி யருளியது இத் திருப்பதிகம் . ஒவ்வொருபாடலின் இறுதியிலும் ` சொல்லுநா நமச்சிவாயவே ` என்று அருளியிருப்பதால் , இதற்கு , ` நமச்சிவாயத் திருப்பதிகம் ` என்ற பெயர் வழங்கப் படுகிறது . ( தி .12 பெரிய . புரா . ஏயர்கோன் . புரா . 87) குறிப்பு : இத் திருப்பதிகம் , கொடுமுடிக் கோயிலில் உள்ள பெருமானது அழகிய திருமேனியைக் கண்டு வணங்கியபொழுது எழுந்த பேரன்பால் , ` இவரை , யான்மறவேன் ` என்னும்கருத்தால் அருளிச் செய்தது . இதன்கண் திருவைந்தெழுத்தை எடுத்தோதியருளினமையின் , இது , ` நமச்சிவாயத் திருப்பதிகம் ` என்னுந் திருப்பெயரைப் பெற்றது .