நாவரசர் திருநல்லூரில் இறைவன் திருவடி சூட்டப் பெற்றபின் பலநாள் அங்குத் தங்கித் தொழுது தமிழ் மாலை பல பாடித் திருத்தொண்டு செய்து , பின்பு திருக்கருகாவூர் சென்று அங்குக் கண்ணுதலைக் தொழுது கசிந்து பாடியருளியது இத் திருப்பதிகம் . ( தி .12 திருநாவு . புரா . 198) குறிப்பு : இத்திருப்பதிகம் முழுவதும் இறைவனை , ` அடியவர்க்குக் ` கண் ` என்று அருளிச்செய்கின்றார் .