திருமாலும் பிரமனும் அன்பு பாராட்டி அடிமைத்திறங் கருதாமல் தம்மாற்றலால் சிவபெருமானது அடியையும் முடியை யும் காண முயன்றனர் . சிவபெருமான் அருளினால் தாமாகவே ` இங்குற்றேன் ` என்று இலிங்கத்தில் எழுந்தருளினான் . இத் திருப்பதிகம் சிவபெருமானை அடையும் நெறி நான்கனுள் சரியையின் இன்றியமையாச் சிறப்பை வற்புறுத்தி எடுத்துக் கூறுவதுடன் சிவலிங்கத் தத்துவத்தையும் கூறுவதால் இப்பெயர் பெற்றது .