சொல்லின் அரசர் திருவாரூரில் திருத்தொண்டர் களுடன் திருநெடுந்தேவாசிரியன் முன் வந்து இறைஞ்சித் திருமாளிகை வாயில்களுட் புகுந்து , புற்றுகந்தாரைக் கண்டு கொண்டார் . தொழுதார் . விழுந்தார் . புளகம் உற்றார் . எழுந்தார் . அன்பு கூர்ந்தது . கண்களில் இடையறாப் பேரன்பு மழை பொழிந்தது . எய்தரிய கையறவால் திருப்பதிகம் அருள்செய்து அங்கிருந்தார் நாவரசர் . திருவாரூர் நிலவுமணிப்புற்றிடங்கொள் நிருத்தர் தம்மைக் காலங்களில் அணைந்து கும்பிட்டுப் ` பாடிளம் பூதத்தி னான் ` எனும் திருப்பதிகம் முதலான தமிழ் மாலைகள் சாத்திய வற்றுள் ஒன்று இத்திருப்பதிகம் . ( தி .12 பெரியபுராணம் . 219. 226.)
Get the Flash Player to see this player.
Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.