எழுகூற்றிருக்கை - ஏழு கூறுகளது இருக்கையாகிய பாட்டு. இருக்கை - இருப்பிடம். ஏழு கூறுகள், ஒன்று முதல் ஏழு முடிய உள்ள எண்கள் ஒரு முறை கூடியும், குறைந்தும் வர, எண்ணலங்காரம் அமையப் பாடுவதால் அமையும். அம்முறையாவது: 1) 1,2,1. (2) 1,2,3,2,1 (3) 1,2,3,4,3,2,1, (4) 1,2,3,4,5,4,3,2,1, (5) 1,2,3,4, 5,6,5,4,3,2,1, (6) 1,2,3,4,5,6,7,6,5,4,3,2,1. ஏழு கூறு வருதல் வேண்டும் என்பதற்காக ஆளுவதாகச் சொல்லப்பட்ட அந்த முறையை மீட்டும் ஒருமுறை சொல்லிப் பாட்டை முடிப்பார்கள். இப்பாட்டு அகவற்பாவாகவே வரும், இது, `மிறைக் கவி` எனப்படும் சித்திர கவிகளில் ஒன்றாகும். அதற்கு ஏற்ப இதனைத் தேர்போல வரையப்பட்ட ஓவியத்திற்குள் எண்ணுப் பெயர்கள் முறையாக அமைய அடைத்துக் காட்டுவர். அதனால் இது `மிறைக் கவி` எனப்படும் சித்திர கவிகளில் ஒன்றாகும். அதற்கு ஏற்ப இதனைத் தேர்போல வரையப்பட்ட ஓவியத்திற்குள் எண்ணுப் பெயர்கள் முறையாக அமைய அடைத்துக் காட்டுவர். அதனால், இது `இரத பந்தம்` என்றும் சொல்லப்படும். சித்திர கவியை `அருளாளரல்லது பிறர் பாடலாகாது` எனத் தொல்காப்பிச் செய்யுளியல் உரையில் ஆத்திரையன் பேராசிரியனார் கூறுவர். திருஞானசம்பந்தர் அருளிச் செய்த சித்திரக் கவிப்பாடல்களுள் திரு எழுகூற்றிருக்கையும் ஒன்று.1 என்பது அறியத்தக்கது. இதனுள் சில சொற்கள் பொருளால் எண்ணுப் பெயராய் இல்லாவிடினும் சொல்லால் எண்ணுப் பெயராய் எண்ணலங் காரத்தை நிரப்பும், எண்ணலங்காரமும் முரண் தொடையுள் அடங்கும்.