ஏறூர்ந்த செல்வனே! எனக்கு அப்பனும் அம்மையும் தமையனும் நீ. அன்புடைய மாமனும் மாமியும் நீ. பிறப்பு, குடிமை முதலியவற்றான் ஒப்புடைய மனைவியரும், ஒள்ளிய செல்வமும் நீ, ஒரு குலத்தவரும், பிற சுற்றத்தவரும், நிலையாக நின்று வாழும் ஒப்பற்ற ஊரும் நீ, நுகர்ச்சிப் பொருள்களாகவும், ஊர்தி வகைகளாகவும் தோன்றுபவனும் நீ, இப்பொன்னும் இம்மணியும் இம்முத்தும் நீ, எனக்குத் துணையாய் உடனின்று உலகத்து அப்பன் அம்மை முதலாயினாரினின்று என்னைத் துறப்பிப்பானும் நீ. நீயே எனக்குக் கடவுள்.
குறிப்புரை:
இத் திருத்தாண்டகம், தமக்கு எல்லாப் பொருளும் இறைவனேயாகக் கொண்டு நின்ற தம் அன்பின் மேலீட்டினை அருளிச் செய்தது.
அப்பன் - தந்தை. அம்மை - தாய். ஐயன் - தமையன். ``அன்புடைய`` என்றது, இடைநிலை விளக்காய் நின்று, ``அப்பன்`` முதலிய எல்லாவற்றொடும் இயையும். ஒப்புடைய மாதர் - ``பிறப்பே குடிமை`` (தொல் - பொருள். 269) முதலிய எல்லாவற்றாலும் ஒத்த மனைவியார். ``பெண்ணிற் பெருந்தக்கயாவுள`` (குறள். 54) என்றவாறு, ஒப்புடைய மனைவியை எய்துதல் மிக்க புண்ணியத்தானன்றிக் கூடாமையின், அவ்வாறு எய்திய மனைவி என்பார், ``மாதர்`` எனப் பன்மையால் அருளிச் செய்தார். பொருள் - பணம். `அறநெறியான் வந்த பொருள்` என்பார், ``ஒண்பொருள்`` என்று அருளிச்செய்தார்; ``ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு`` (குறள். 760.) என்றார், திருவள்ளுவநாயனாரும். குலம் - கிளை; இதனை, `சாதி` என்ப. அஃது ஆகுபெயராய், `குலத்தவர்` எனப் பொருள் தந்தது. சுற்றம் - மேற்கூறிய அப்பன் முதலியவரோடு நேராகவும், வழிவழியாகவும் தொடர்புபட்டு வருவோர். ``ஓர் ஊர்`` என்றது, `நிலையாக நின்று வாழும் ஊர்` என்றவாறு. துய்ப்பன - நுகர்ச்சிப் பொருள். உய்ப்பன - ஊர்தி வகைகள்; அவற்றை வேறு ஓதினார், பொருளுடையார்க்கு அவை மிக்க பயனையும், பெருமையையும் தருதலின். செல்வம் உடையார் என்பதை விளக்க, `யானை எருத்தம் பொலியக் குடைநிழற் கீழ்ச்...சென்றோர்` (நாலடி.3) என ஊர்தியையே பிறரும் சிறந்தெடுத்துக் கூறினார். `துய்ப்பனவும் உய்ப்பனவுமாய்` என ஆக்கம் வருவிக்க. துணையாய் - உலகியலாய குழியில் வீழாது காக்கும் துணைவனாய் உடன்நின்று. துறப்பித்தல், உலகத்து அப்பன் அம்மை முதலாயினாரினின்று என்க. பொன் முதலிய மூன்றினும் நின்ற இகரச் சுட்டுக்கள், `இவ்வுலகத்தாரைப் பிணிக்கின்ற` என்னும் பொருளுடையன. இம்மூன்று தொடர்களையும், `தோற்றுவாய் நீ` என்பதன் பின்னர்க் கூட்டுக. இறைவன் - கடவுள். ``ஏறு ஊர்ந்த செல்வன்`` என்றது, `என்னை மேற்கதிக்கண் உய்ப்பவன்` என்றபடி, ``அப்பன் நீ`` என்பது முதலிய எல்லாவற்றிற்கும் இயைய. `எனக்கு` என்பதனை முதற்கண் வருவிக்க.
பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
×
తెలుగు / தெலுங்க
వృషభవాహనుడైన సంపన్నుడా! నాకు తల్లిదండ్రులు నువ్వే. ప్రేమ కురిపించే అత్తమామలు నువ్వే. సంసార జీవితంలోని అనుకూలమైన భార్య, ఎన్నదగు సంపదనువ్వే. స్వజనులు, ఇతరబంధువులు స్థిరంగా జీవించే నిరుపమానమైన ఊరు నువ్వే. ఆస్వాదించే వస్తువుగా, వాహనాలుగా గోచరించేవాడివి నువ్వు. బంగారం, మణులు, ముత్యాలన్నీ నువ్వే. నాకు తోడుగా ఉండి, ప్రాపంచిక సంబంధులైన తల్లిదండ్రులు, బంధుజనం నుంచి సన్యసింపజెయ్యగల భగవంతుడివి నువ్వే. 1
అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2024
×
ಕನ್ನಡ / கன்னடம்
Under construction. Contributions welcome.
×
മലയാളം / மலையாளம்
Under construction. Contributions welcome.
×
චිඞංකළමං / சிங்களம்
Under construction. Contributions welcome.
×
Malay / மலாய்
Under construction. Contributions welcome.
×
हिन्दी / இந்தி
95. मिश्रित- तिरुत्ताण्डकम्
प्रभु षिव तुम ही पिता, तुम ही माता हो,
तुम ही हमारे अधिदेवता हो।
तुम ही हमारे प्रिय मामा हो,
तुम ही हमारे प्रिय मामी हो।
तुम ही अप्रतिम जीवन-संगिनी हो,
तुम ही प्रज्वलित स्वरूप हो।
तुम ही अन्र्तयामी हो,
तुम ही कुल, बंधु, गाँव, अनुभूति स्वरूप मुझे प्रेरित करने वाले हो
सब कुछ तुम ही हो,
मेरे हृदयाकाष में स्थित संग-साथी हो,
तुम ही स्वर्ण हो, तुम ही मणिरत्न हो,
तुम ही मोती हो,
हे प्रभु! वृषभारूढ़ होकर गमन करने वाले प्रियतम भी तुम ही हो।
रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
×
संस्कृत / வடமொழி
Under construction. Contributions welcome.
×
German/ யேர்மன்
Under construction. Contributions welcome.
×
français / பிரஞ்சு
Under construction. Contributions welcome.
×
Burmese/ பர்மியம்
Under construction. Contributions welcome.
×
Assamese/ அசாமியம்
Under construction. Contributions welcome.
×
English / ஆங்கிலம்
The None-pareil tirutthaandakam
You are loving father, mother and elder brother;
You are uncle as well as aunt;
You are well-endowed wife and righteous riches,
You are clan, kin and peerless town;
You are objects of relish and carriers too;
As help, You authored renunciation in my heart;
You are this gold, this ruby and this pearl; You are God;
You alone are the opulent One that rides the Bull.