அழகினை உடைய ஆதிரைத்திருநாளில் தேவர் கூட்டத்தில் யாவர்யாவர் தரிசிக்கவந்தனர் எனின், திருமால், நான் முகன், அக்கினி, சூரியன், இந்திரன் முதலியோர் வந்தனர். தேர்ஓடும் வீதியில் தேவர் கூட்டங்கள் நாற்றிசையும் நிறைய, நிலவுலகெங்கும் நிறைந்த சிவபெருமானுடைய பழமையான புகழைப்பாடியும்,அதற்கு ஏற்ப ஆடியும், அந்த ஆதிரைநாளை உடைய அப்பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.
குறிப்புரை :
`யார் யார்` என்பது, ``ஆர் ஆர்`` என மருவிநின்றது. திருவாதிரை நாள் தில்லைப் பெருமானுக்குத் தனிப்பெருந் திருநாளாத லின், அதனையே எடுத்துக்கூறினார். இத் திருப்பதிகம் அந்நாளில் இவரது அன்பினை வெளிப்படுத்துதற் பொருட்டு, ஓடாது நின்ற தேரினை இத்திருப்பதிகம் பாடி ஓடச் செய்தார் என்பது மரபு. தில்லைத் தேர்த் திருவிழா இஞ்ஞான்று திருவாதிரைக்கு முன்னாளில் செய்யப் படுகின்றது. அணி - அழகு. `ஆதிரை நாளில் அமரர் குழாத்தில் ஆரார் வந்தார்` என்க. ``வந்தார்`` என்றதன்பின், `எனின்` என்னும் சொல் லெச்சம் வருவிக்க. இனி அவ்வாறு வருவியாது, கூற்றும், மாற்றமுமாக நின்றாங்கு நிற்ப உரைப்பினும் ஆம். ``இந்திரனும்`` என்றதன்பின் `வந்தார்` என்னும் பயனிலை எஞ்சி நின்றது. `அரசன் வந்தான்` என்றவழி, அமைச்சர் முதலாயினார் வந்தமை தானே பெறப் படுதல் போல, `நாராயணன் முதலியோர் வந்தார்` எனவே, ஏனைத் தேவர் பலரும் வந்தமை சொல்லாமே அமைந்தது. பெரியோனது தனிப் பெருவிழாவாகலின், அமரர் அனைவரும் எஞ்சாது வருவாராயினர். ``தேரார்வீதியில்`` என்பதன்முன், `இவ்வாறு` என்னும் இயைபு படுத்தும் சொல் வருவிக்க. ``தேரார் வீதி`` என்றதனால், ஆதிரை நாளில் வீதியில் தேரோடிய குறிப்பு அறியப்படும். ``நிறைந்து`` என்ற தனை, `நிறைய` எனத் திரிக்க. நிறைய - நிறைந்து நிற்க. பார் ஆர் - நிலவுலகெங்கும் நிறைந்த. தொல் புகழ் - பழமையான புகழ்; இது சிவபிரானுடையது. ஆடியும் - அப்பாடலுக்கு ஏற்ப ஆடுதலைச் செய் தும். ``ஆதிரைநாள்`` என்றமையின், `அந்நாளை யுடையானுக்குப் பல்லாண்டு கூறுதும்` என்க.
பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
తెలుగు / தெலுங்கு
ಕನ್ನಡ / கன்னடம்
മലയാളം / மலையாளம்
චිඞංකළමං / சிங்களம்
मराठी / மராத்தி
हिन्दी / இந்தி
संस्कृत / வடமொழி
Deutsch / யேர்மன்
français / பிரஞ்சு
English / ஆங்கிலம்
అందమైన ఆరుద్రనాడు దేవతల గుంపులో ఏఏ దేవతలు దర్శింప వచ్చారంటే, మాధవుడు, నలువ, అగ్ని, సూర్యుడు, ఇంద్రుడు మొదలైన వారంతా వచ్చారు. తేరు సాగే వీధులలో దేవతలు నాలుగు దిక్కులా నిలబడ, భూప్రపంచమంతా వ్యాపించిన పరమశివుని అత్యంత ప్రాచీనమైన కీర్తిని పాడి, ఆ పాటకు తగినవిధంగా ఆడి, ఆ ఆరుద్రానక్షత్రపు దినాన వెలసిన మన స్వామి పలు ఏళ్ళూ మనాలి అని ఆశిద్దాం.
[అనువాదము : డా. సత్యవాణి, 2014]
ಸುಂದರವಾಗಿರುವ ತಿರುವಾದಿರೈ (ನಕ್ಷತ್ರ) ಎಂಬ ಪವಿತ್ರವಾದ ದಿನ ಸುರರ ಸಮೂಹಗಳಲ್ಲಿ ಯಾರ್ಯಾರು ದರ್ಶಿಸಲು ಬಂದರು ಎಂದರೆ, ಹರಿ, ನಾಲ್ಮೊಗ, ಅಗ್ನಿ ಸೂರ್ಯ, ಇಂದ್ರ ಮುಂತಾದವರು ಬಂದರು. ತೇರು ಚಲಿಸುವ ಬೀದಿಯಲ್ಲಿ ದೇವ ಗಣಗಳು ಸಂಗೀತ ಮೇಳಗಳು ನಾಲ್ದೆಸೆಗಳಲ್ಲೂ ಮೊಳಗಲು ಮರ್ತ್ಯಲೋಕವೆಲ್ಲಾ ಶ್ರೇಷ್ಠ ಶಿವಪರಮಾತ್ಮನ ಪುರಾತನ ಕೀರ್ತಿಯನ್ನು ಹಾಡಿ, ಅದಕ್ಕೆ ತಕ್ಕಂತೆ ಕುಣಿದು, ಆ ತಿರುವಾದಿರೈ ದಿನವನ್ನು ಆಚರಿಸುವ ಆ ಶಿವನು ಹಲವು ಕಾಲ ಬಾಳಲಿ ಎಂದು ಸ್ತುತಿಸೋಣ.
ಕನ್ನಡಾನುವಾದ : ಕೆ. ಮಲರ್ ವಿಳಿ, 2010
ആരാരോ വരുമവര് അമരര്
അണി അണിയായ് ആതിര നാളതില്
നാരായണനൊടു നാന് മുഖന് അഗ്നി
രവി ഇന്ദ്രനും മറ്റു ദേവഗണങ്ങളും
തേരോടും വീഥിയതിലെ ദിശ എല്ലാം
നിറഞ്ഞങ്ങു നിന്നിടുമവര്
പാരോര് നാമും അവന് തന്നുടെ നര്പ്പുകഴ്പാടിയാടി
പല്ലാണ്ടു പല്ലാണ്ടു പുകഴ്ത്തിടുവോം 300
പാരോര് = ഭൂലോകര്; നര്പ്പുകഴ് = നന്മയരുളുന്ന കീര്ത്തി കര്മ്മം; ആതിര നാള് = തിരുവാതിര ദിവസം
In graceful Aadirai day, of the Devas to darshan
Him our Lord were fair Maal, Four-faced, Agni, Sol
And Indra and all. On the car-street
Poured in from four airts Deva-clans riding cars.
May we sing the hoary praise of Lord Civa
Omnipresent on this Pritvi and perform Dance
In accord. May we hail the Lord of Aadirai,
The Betel-Geuse, to abide for Eternal Eons.