சுந்தரர் பல தலங்களையும் வணங்கிக்கொண்டு திரு வாலம் பொழிலில் பெருமானை வணங்கித் தங்கி இரவு துயில் கொள்ளும்பொழுது பெருமான் கனவில் தோன்றி , ` மழபாடி யினில் வருவதற்கு நினைக்க மறந்தாயோ ?` என்று அருள , துயில் எழுந்து திருமழபாடி அடைந்து தொழுது பாடியருளியது இத்திருப்பதிகம் . ( தி .12 ஏயர்கோன் . புரா . 71-74) குறிப்பு : இத்திருப்பதிகம் , சுவாமிகள் கனவில் இறைவர் , ` நீ மழபாடி யில் வருவதற்கு மறந்தாயோ ?` என்று வலிய வந்து அழைத்த கருணையை நினைந்து உருகி , ஆங்கு அணைந்து அருளிச்செய்தது .