` நீடிய வேலைகலக்கும் நெடுமந்தரகிரி போல ஓடி உழறி மிதித்துப் பிளந்து நாடிப் பலரையும் கொன்று நகரம் கலங்கி மறுக ஆகுலம் ஆக்கிய யானை , ஆண்ட அரசை வணங்கி அஞ்சி மீண்டு , ஏவியவரையே கொன்று சென்றது . அது கண்ட அமணர் ஆராய்ந்து , அரசைக் கல்லொடு கட்டிக் கடலிற் பாய்ச்ச முடிவுசெய்து , அரசன் இசைவு பெற்று , அவ்வாறே கடலருகில் ஏகினர் . நாவுக்கரசரும் திருநின்ற செம்மையுள்ளம் சிறப்பச் சென்றார் . மன்னவன் சொன்னபடி முடித்து அப்பதகர் மீண்டனர் . உறைப்புடைய மெய்த்தொண்டர் , எந்தையை ஏத்துவன் என்று சிவனஞ்செழுத்தும் துதித்துப் பாடியது இந் நற்றமிழ்ப்பாமாலைத் திருப்பதிகம் `.