திருநாகேச்சரத்தை வணங்கிப் பதிகம்பாடித் தொழுது , இடைமருதுக்கு எழுந்தருளிய பிள்ளையாரை , அடியார்கள் எதிர் கொண்டு அழைத்தனர் . பிள்ளையார் முதலில் பரம் பொருளா னார் முதற்கோயிலைச் சென்று வழிபட்டனர் . தமது கண்களில் ஆனந்தபாஷ்பம் வழிய அவனிமீது விழுந்தெழுந்து , ` நடைமரு திரிபுரம் ` முதலிய பல பதிகங்களை அருளிச் செய்தனர் .