குருவருள்: ஞானசம்பந்தர் அவதரித்த சீகாழிப் பதி பன்னிரு திருப்பெயர்களை உடையது. ஆளுடைய பிள்ளையார் அப்பன்னிரு திருப்பெயர்களைத் தனித்தனியே குறிப்பிட்டுப் பதிகங்கள் அருளியிருப்பதோடு, பன்னிரு பெயர்களுக்குப் பன்னிரு திருப்பாடல்களைக் கொண்ட 11 திருப்பதிகங்கள் அருளியுள்ளார். அத்தகைய பதிகங்களில் ஒன்றாய் அப் பெயர்கள் அமைதற்குரிய புராண வரலாற்றுக் குறிப்புக்களுடன் இப்பல்பெயர்ப் பத்து அமைந்துள்ளது. இத்திருப்பதிகத்தில் பிரமபுரம் முதலாக ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு தலம் வருமாறு பன்னிரு பெயருக்கும் பன்னிரு பாடல்கள் அமைந் துள்ளன.யல அகத்துறைப் பதிகம் : சீகாழிப் பதியின் பன்னிரு பெயர்களைத் தனித்தனியே ஒவ்வொரு பாடலிலும் குறிக்கும் பல்பெயர்ப் பத்து.