கரும்பு போன்ற இனிய சொற்களை உடைய பார்வதியைத் தன் திருமேனியின் இடப்பகுதியாகக் கொண்டவன். மேம்பட்ட வயிரமலைபோன்ற வடிவினன். அலரும்பருவத்து அரும்பாய்க் கட்டிய கொன்றைப் பூமாலையான். நால்வேதமும் ஆறங்கமும் ஆயினான். வண்டுகள் விரும்பும் நறுமணச்சோலைகள் சூழ்ந்த அழகிய ஆரூரில் மேல் நோக்கும் சுடரொளி போன்றவன். ஒளிப்பிழம்பு அணைதல் இல்லாத விளக்குப் போன்றவன். வீடுபேற்று இன்பமாக இருப்பவன் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
வெண்ணீற்றுப் பூச்சில் ஈடுபட்டு. ` கனவயிரக் குன்றனைய காட்சியானை ` என்றருளிச் செய்தார். திருவாரூரிற் காணவேண்டும் உணர்வுண்டாயினமை, ` ஆரூர்ச் சுடர்க்கொழுந்தை ` என்றருளியதனாற் பெறுதும். பிற இடங்களினும் இவ்வாறே, பின்னர்க் காணுமதனையேனும், முன்னர்க் கண்டதனையேனும், அவ்விடங்களில் இறைவர் செய்த அருட்செயல்களையேனும் நினைந்து அருளிச்செய்யுமாற்றினை இடம் நோக்கியுணர்ந்துகொள்க. சுரும்பு - வண்டு. கடிபொழில்கள் - நறுமணச் சோலைகள். துளக்கு - அசைவு.