சிற்றறிவு முன் சிதையிற் சேர்வார் இன்றாம் சிற்றறிவு முன்னே கெடுமாயின் பின் அருளைப் பொருந்தப் போகிற பேரில்லை ; சிறிது மற்றதனில் நிற்கில் அருள் மன்னாவாம் சிற்றறிவு கொஞ்சமாக நின்றாலும் அருள் பொருந்தாது ; துற்ற முகில் மின்கொண்ட சோலை வியன் மருதச் சம்பந்தா என்கொண்டு காண்பேன் யான் மேகங்கள் நெருங்கின ஆகாசத்தை யளாவிய சோலை சூழ்ந்த வியன் மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே எதைக்கொண்டு காணவல்லேன் யான்.
சிற்றறிவு கெட்டதுமன்று முன்போல் இருந்தது மன்று, பாசபந்தம் நீங்கித் திருவடியிலே கலந்து கிடக்குமென்பது கருத்து.
உதாரணம் : சிவஞானசித்தியில் (11.10) ‘செம்பிரத குளிகையினாற்... சிவானுபவ மொன்றினுக்கு முரித்தே’ என்பது கண்டுகொள்க.