கனவு கனவென்று காண்பரிதாம் கனவிலே நின்று கனவைத் தெரிசிக்கப்படாது ; காணில் நனவில் அவை சிறிதும் நண்ணா நனவிலே காணும் கண்டதென்னில், நனவில் அந்தக் கருவிகள் இல்லாத படியாலே காணவில்லை; முனைவன் அருள்தான் அவற்றில் ஒன்றா அருளிலே நின்று கண்டதென்னில், அருள் அவத்தைகளிற் பொருந்தாது; தட மருதச் சம்பந்தா யான் அவத்தை காணுமாறு என் தடாகம் பொருந்திய மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே நான் அவத்தைகளைத் தரிசிக்கும்படி எப்படி.
சுத்த தத்துவங்களைக் கொண்டு அறிய வேண்டுமென்பது கருத்து.
உம் : சிவப்பிரகாசத்தில் (39) ‘இத்தகைமை இறையருளால் உயிரறியும்’ என்ற பாடத்திற் கண்டுகொள்க.