என்னறிவு சென்றளவில் யான் நின்று அறிந்தபடி என்னுடைய போதங் கழன்றவிடத்து யான் மாத்திரம் நின்று சிவஞானத்தை யறிந்த முறைமை யெப்படி என்னில்; என்னறிவிலார் அறிக என்று ஒருவன் சொன்னபடி சொல்லக்கேள் என்று ஒருவன் சொன்னான் எனக்கதனை என்னறிவென்கிற தன்மையில்லாதவர்களே கேட்பீராக என்றொருவன் சொன்ன முறையே அந்த உபதேசத்தை எனக்குச் சொல்லக்கேள் என்றொருவன் சொன்னான்; சொல்லக்கேள் யான் உனக்கு அச்சொல் அந்த உபதேசத்தை யான் உனக்குச் சொல்லுகிறேன் கேட்பாயாக.
இதனுள், குருபரம்பரை இல்லாமற் சிவஞானம் பிரவேசியாதென்பதும் இந்நூல் குருபரம்பரை யுபதேசத்தைப் பெற்றுப் பாடின நூலென்பதுங் கண்டு கொள்க.