சுவாமிகள் , திருவீழிமிழலை , திருவாஞ்சியம் தொழுது திருமறைக்காடு செல்பொழுதில் புனிதர்வாழ் பதிகள் பல வணங்கி அருளியவற்றுள் ஒன்று இத் திருப்பதிகம் . ( தி .12 திருநாவு . புரா . 263) குறிப்பு : இத் திருப்பதிகம் , சிவபெருமானது பெருமைகளைத் தனித் தனி நினைந்து , அப் பெருமானை அடையாது பலநாட்களை வீணே போக்கினமைக்கு இரங்கி அருளிச்செய்தது .